விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல்லிற்க்கான பணத்தை செலுத்தும் வரை மீண்டும் நெல்லினை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டப் போவதில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஏற்கனவே விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நெல் கையிருப்புக்கு இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபை பணம் செலுத்தாததன் காரணம் குறித்து பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பெறப்பட்ட நெற்செய்கைக்காக விவசாயிகள் ஏற்கனவே 1000 இலட்சம் ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,செலுத்த வேண்டிய எஞ்சிய தொகையினை நாளை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.