இன்று காலை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை சந்தித்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகராலயத்திற்கு வருகை தந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வரவேற்றார்.
பின்னர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட நினைவுப் புத்தகத்தில் அனுதாபக் குறிப்பை எழுதி 07 தசாப்தங்களாக இரண்டாம் எலிசபெத் மகாராணி உலக மக்களுக்காக ஆற்றிவரும் அளப்பரிய சேவையைப் பாராட்டினார்.
எதிர்வரும் 19ஆம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறவுள்ள மகாராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ள உள்ளார்.