விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமித அபேரத்னவை ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று 12ஆம் திகதி உத்தரவிட்டார்.
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமித அபேரத்ன விளக்கமறியலிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.