புதிய தேர்தல் முறைமைக்கான வாக்கெடுப்பு அல்லது புதிய தேர்தல் முறைமைக்கான ஆரம்ப தீர்மானம் அவசியம் என பாஃப்ரல் அமைப்பு தெரிவிப்பு!
அவ்வாறான அடிப்படை உடன்படிக்கையின்றி சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது கூட நடைமுறைக்கு மாறானது என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமையை தயாரிப்பதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும், அது நிறைவேற்றப்படாவிட்டால், சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்று மக்களின் கருத்தை அறியப் போவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த Pafferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.