சர்வதேச கைதிகள் நல தினத்தை ஒட்டி 417 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு அதிகாரங்களுக்கு அமைய விசேட அரச மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து அபராதம் செலுத்த முடியாத 417 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் நான்கு பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.