அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன, சர்வதேச நாணய சபைக்கு இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்கவோ அல்லது இரகசிய பிரேரணையோ இல்லை என தெரிவித்தார்.
அமைச்சரவை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் COPA, CORP உள்ளிட்ட நிதிக் குழுக்களின் தலைவர்களுக்கு சரியான நேரத்தில் இந்த விடயத்தை முன்வைப்பேன் என்றும் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.