கொரியா நாட்டில் வெல்டிங், கிரைண்டிங் போன்ற துறைகளுக்கு அதிகளவான உள்ளதாகவும், அதற்கு இலங்கையர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார்.
இதற்கு NVQ சான்றிதழ் தேவையில்லை என்றும் அமைச்சர்தெரிவித்தார்
வெல்டிங், கிரைண்டிங் போன்ற துறைகளில் அனுபவம் உள்ள 45 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைகளுக்கான சம்பளம் 8.5 இலட்சம் ரூபாவில் இருந்து ஆரம்பமாகின்றது என்றும், இதில் ஆர்வம் உள்ளவர்கள் எவரேனும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பணியகத்தின் கீழ் உள்ள அலுவலகத்திற்கு வருமாறும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
விசாரணைக் குழு உரிய அறிவுறுத்தல்களை வழங்கும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் போது அரச வங்கிகள் மூலம் கடன் வழங்கும் வேலைத்திட்டம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் கீழ் தாதியர் சேவைகளுக்காக பெருமளவிலான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், கட்டுமானம் மற்றும் ஏனைய துறைகளுக்கான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், எந்தவொரு நாடும் இலங்கையர்களுக்கு வேலைக்கான வீசாவை மறுக்காது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.