6 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தை ஓராண்டு காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக குறித்த மாவட்டத்தின் மாவட்ட அலுவலகம் அல்லது கொழும்பில் உள்ள அலுவலகத்திற்கு செல்லுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
6 மாத காலத்திற்கு வழங்கப்படும் உரிமங்கள் ஒரு வருடம் வரை நீட்டிக்கப்படும்.
இதேவேளை, தற்போது மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வசம் உள்ள சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வெளிநாடுகளுக்கு செல்லும் புதிய அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில வாரங்களில் 450,000 அச்சு அட்டைகள் நாட்டுக்கு கிடைக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.