(எம்.எப்.எம்.பஸீர்,பாறுக் ஷிஹான்)
இளம் பிக்குகள் மூன்று பேரினை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று சந்தேகத்தின் பேரில் பௌத்த பிக்கு ஒருவரினை எதிர்வருகின்ற 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று இன்று (13) உத்தரவினைப் பிறப்பித்துள்ளது .
மேலும் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து மூன்று இளம் பிக்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பான விசாரணை இன்றையதினம் கல்முனை நீதிமன்றத்தின் நீதிவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சந்தேக நபரான குறித்த பிக்குவினை எதிர்வருகின்ற மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்றத்தின் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.