தாமரை கோபுரத்தை பார்வையிடும் பயணச்சீட்டுக்குப் பதிலாக போலியான பயணச்சீட்டு விநியோகிக்கப்படுவதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பயணச்சீட்டு போலியானது எனவும் நாளை முதல் நீங்கள் தாமரை கோபுரத்திற்கு சென்று டிக்கெட்டை கொள்வனவு செய்து பார்வையிடலாம் என சீன தூதரகத்தின் டுவிட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (15) முதல் பொதுமக்கள் தாமரை கோபுரத்தை பார்வையிட வாய்ப்புவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்க்கான கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் டிக்கெட்டுகளை வாங்கி உள்ளே செல்லலாம்.வெளிநாட்டவர்களுக்கு டிக்கெட் கட்டணம் 20 அமெரிக்க டொலர்கள் ஆகும்.