வட்டுக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கூரிய முனைகள் கொண்ட 11 இரும்பு வாள்களை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துனாவி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர்.
அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
எதற்காக இவ்வளவு வாள்கள் தம்வசம் வைத்திருந்தார்கள் என்பது தொடர்பில் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.