இந்த நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 08 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பேசாலை, குடியிருப்பு கடற்கரையில் நேற்று (13) இரவு மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரையில் தங்கியிருந்த குழுவினர் அவதானித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அங்கு, 18 வயதுக்கு மேற்பட்ட மூன்று (03) ஆண்கள், இரண்டு (02) பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று (03) உட்பட எட்டு பேர், சட்டவிரோதமாக நாட்டிலிருந்து குடிபெயர்வதற்காக அந்தக் கடற்கரையில் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கடல் மார்க்கமாக வெளி நாடு (08) பேரை கடற்படையின் காவலில் வைக்க ஏற்பாடு செய்துள்ளதாக அவர்கள் அறிவித்தனர்.
அதன்படி கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மொறவெவ, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் பெதுருதுடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பது மற்றும் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் வலியுறுத்துகின்றது.