கவனக்குறைவாக காரை ஓட்டி நபரொருவரைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு அழைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் லஹிரு என் சில்வா இன்று உத்தரவிட்டுள்ளார். .
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி அதிகாலை பாணந்துறை ஹொரேதுடுவ பழைய கல்லுபர, கொரகபொல பகுதியைச் சேர்ந்த நெவில் பீரிஸ் (64) என்பவேரே கார் விபத்தில் உயிரிழந்தார்.
மேற்படிய வழக்கானது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், விபத்தைத் தவிர்க்கத் தவறியமை, காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லாமல் ஓடியமை, விபத்து தொடர்பில் தெரிவிக்காமை ஆகிய குற்றங்களுக்காக குசல் ஜும்மான் மெண்டிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றில் பதிவு செய்யப்படுள்ளது.
அடுத்த விசாரணையில், இறந்தவர் தொடர்பான மருத்துவ அறிக்கையினையும் சமர்ப்பித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், அரசுத் தரப்பு 1, 3 மற்றும் 5 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு தரப்பில் ஆஜரான அகில ஜயசுந்தர, தனது கட்சிக்காரர் நிரபராதி என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
வழக்குரைஞர் பிரேமரத்ன ஜயசிங்க வழக்குத் தொடரப்பட்டது மற்றும் கான்ஸ்டபிள் சுமித் (32119) காவல்துறை சார்பில் ஆஜராகி இருந்ததோடு இந்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.