இலங்கைக்கு மேலும் நிதியுதவி வழங்க எதிர்பாக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் மூலம் இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வர முடியும் என்பதால் இந்தியா மேற்கொண்ட நிதி உதவிகளை வழங்க எதிர்பார்க்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுவரை, இந்தியா இலங்கைக்கு நிதி மற்றும் பொருள் அடிப்படையில் கிட்டத்தட்ட நான்கு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
எனினும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து உடனடியாக இலங்கைக்கு பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.