மின்சாரக் கட்டண அதிகரிப்பால் சுமார் 12,000 மத வழிபாட்டுத் தலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எவ்வாறாயினும், அந்த வழிபாட்டுத் தலங்களுக்கு இலங்கை மின்சார சபையினால் மானியங்களை வழங்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில், அந்தந்த மத ஸ்தலங்களுக்கு சூரிய சக்தி அமைப்புகளை அறிமுகப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். விகாரைகளின் மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போதே கேள்வியொன்றை எழுப்பினார்.
வாய்மூல பதில்கள் எதிர்பார்க்கப்படும் கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடமும் கேள்வி எழுப்பினார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிலளிக்கும்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கு தவணை முறையில் சோலார் பேனல்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.