ஹங்வெல்ல, கடுவெல உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 08.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
லபுகமுவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிலத்தடி நீர்த் தாங்கி சுத்தப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஹாஹேன, ஜல்தர-ரணால, மாபிடிகம மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளுக்கு நீர்விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.