சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது கத்தியினால் தாக்கியதில் காயம் அடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாரவில குறுக்கு சந்தி பகுதியில் பெண்ணொருவரின் கைப்பையை திருடிய சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போதே சந்தேக நபர் அதிகாரியை கத்தியால் தாக்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவத்தில் மாரவில பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட பெண்ணின் கைப்பையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.