2022ஆம் ஆண்டில் புதிதாக 19 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
2021 இல் 2,093 முச்சக்கர வண்டிகளும் 2020 இல் 7,150 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புதிய பதிவுகள் குறைந்துள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகளின்படி 2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் புதிய முச்சக்கர வண்டி பதிவுகளின் வருடாந்த சராசரி 50,000 ஐ தாண்டிஇருந்ததாக நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.
மேலும்,2011 இல் 138,426 புதிய முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2015 இல் பதிவுசெய்யப்பட்ட 129,547 முச்சக்கர வண்டிகளுடன் ஒப்பிடுகையில், ஒரு வருடத்தில் அதிகூடிய முச்சக்கர வண்டிகள் பதிவாகியுள்ள ஆண்டாகும்.