சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்திற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (20) தனது சான்றிதழை பதிவு செய்ததாக இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டமூலம் கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அரசாங்க வருவாயை உயர்த்துவதற்கும், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஒரு நடவடிக்கையாக 2022 பட்ஜெட்டில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆண்டு விற்றுமுதல் ரூ. 120 மில்லியனுக்கும் அதிகமான இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் வரிக்கு உட்பட்ட புரள்வு மீது 2.5 சதவீத வரி விதிக்கப்படுகின்றது.
இந்த வரி மூலம் ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வருவாய் ரூ. 140 பில்லியன் ஆகும்.