நூருல் ஹுதா உமர்
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய அனுசரணையில் 40 க்கும் மேற்பட்ட அணிகளுடன் கண்டி ரக்பி மைதானத்தில் ரக்பி சுற்றுப்போட்டிகள் நடைபெற்றன. 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட மத்திய மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான இந்த ரக்பி போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹசன் ஹஷ்மி கலந்து கொண்டார்.
பாகிஸ்தான் அரசாங்கம் விளையாட்டு மூலம் பாகிஸ்தான்- இலங்கை இளைஞர் தொடர்புகளை ஆதரிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த றக்பி சுற்றுப்போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் சம்பியன்ஷிப்பை கண்டி தர்மராஜா கல்லூரியும், இரண்டாம் இடத்தை கண்டி திரித்துவக் கல்லூரியும் வென்றன.
12 வயதுக்குட்பட்டோர் குழுவும் இந்த போட்டிகளில் விளையாடியிருந்ததுடன் போட்டியின் முடிவில் கலந்து கொண்டிருந்த அனைத்து வீரர்களும் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.