பேராதனை பல்கலைகழகத்தின் சிற்றுண்டிச்சாலையில் அண்மையில் இடம்பெற்றதாக கூறப்படும் மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் குறித்த மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதுடன், இந்த மோதல் நிலை ஒரு கொடுமையான சம்பவத்தின் அடிப்படையில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.