பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இலங்கையில் இருந்து 10,000 தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு மலேசியா இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக மலேசியாவின் மனிதவள அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு உதவும் முயற்சியாகவே தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ள மலேசியா தீர்மானித்துள்ளதாக மலேசிய மனிதவள அமைச்சர் எம்.சரவணன் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு நாட்டிலுள்ள தொழில் அதிபர்கள் மற்றும் முதலாளிகள் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும் என எம்.சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.