மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள டாரிமோரோவில் உள்ள எல் ஜாராஸ் பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் இந்த மண்டபத்திற்குள் புகுந்து சுட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது
9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்
துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், கொலையாளிகள் தங்கள் கார்களில் தப்பிச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.