ஹிஜாப் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஈரானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹ்ஸா அமினி என்ற 22 வயது பெண் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டில் வன்முறைச் சூழல் நிலவுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமிய குடியரசின் மற்ற 80 நகரங்களையும் போராட்டங்கள் எட்டியுள்ளன, குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் நடைபெறவிருந்த நேர்காணலை CNN செய்தி சேவையின் ஊடகவியலாளர் கிறிஸ்டியன் அமன்பூர் ரத்து செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கில் நடைபெறவிருந்த நேர்காணல் முக்காடு அணிய வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக ரத்து செய்யப்பட்டதாகவும், ஈரானுக்கு வெளியே நேர்காணல்களை நடத்தும் போது இதற்கு முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் இதனைக் கோரவில்லை என்றும் அமன்பூர் சுட்டிக்காட்டினார்.
பொலீஸ் காவலில் பெண் ஒருவர் உயிரிழந்ததையடுத்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.