சிரிய கடற்பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் 53 புலம்பெயர்ந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சரின் அறிக்கையை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு சிரியாவில் உள்ள டார்டஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் உயிர் பிழைத்த 20 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு கவிழ்ந்த போது அதில் 120 முதல் 150 பேர் வரை இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கப்பல் எப்படி மூழ்கியது என்பதை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர்ந்தவர்களின் குடியுரிமை தெளிவாக இல்லை என்றும், லெபனான் துறைமுக நகரமான திரிபோலிக்கு அருகிலுள்ள மின்யே என்ற நகரத்திலிருந்து கப்பல் புறப்பட்டது என்றும் அதிகாரிகள் மேலும் தெரிவிகின்றனர்.