இஸ்லாமாபாத்துக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான உறவுகள் அமெரிக்காவின் தேவைகளை பூர்த்தி செய்யாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இதுபோன்ற உறவுகள் பாகிஸ்தானுக்கோ அல்லது அமெரிக்காவின் நலனுக்கோ உதவாது என்றார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான F16 போர் விமான ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானுடனான உறவின் முடிவுகள் குறித்து அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
எப் 16 போன்ற பரிவர்த்தனைகளை எந்த தரப்பினருடனும் மேற்கொள்ளும் போது, சம்பந்தப்பட்ட தரப்பினர் பயங்கரவாதத்திற்கு எதிராகச் செய்யப்படுவதாக கூறினால், அந்த தரப்பினர் பயன்படுத்தும் இடம் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.