நீராவி கசிவு காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3வது அலகு மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பராமரிப்பு பணிகளுக்கு 3-5 நாட்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலகின் திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை மின் உற்பத்தியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் ஆலைகள் பயன்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, நுரைச்சோலை அனல்மின் நிலையம் மீளமைக்கப்படும் வரை தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக நாளை முதல் மின்வெட்டை நீடிக்காமல் மின் உற்பத்தியை பேணுவதற்கு தேவையான டீசல், நாப்தா மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபை வழங்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.