சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தமது அரசாங்கத்தின் முன்னுரிமை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்குடன் இன்று (27) டோக்கியோவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்று நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், சிங்கப்பூர் மீண்டும் இலங்கையில் முதலீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள இலங்கையின் 75வது சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.