அரச அதிகாரிகள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நிறுவனங்களின் சட்ட விதிகளை பின்பற்றாத அரச அதிகாரி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் குற்றமாகும் என தொடர்புடைய சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.