பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கையானது இன்று முன்னெடுக்கப்பட்டதது.
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கையானது அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி மக்களின் பேராதரவுடன் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நாடாளுமன்ற உறுப்பினராகிய எம்.ஏ சுமந்திரன் தலைமையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் இரா.சாணக்கியன் மற்றும் அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.