நாட்டிற்கு தேவையான நிலக்கரி இருப்புக்களை கொண்டு வருவதற்கான முதல்கட்ட உத்தரவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று நிலக்கரி இருப்புக்களை செலுத்துவதற்காக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
நாட்டில் தற்போது உள்ள நிலக்கரி இருப்புக்கள் மற்றும் அவற்றின் போதுமான அளவு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்ககருத்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, நிலக்கரி பெறுவதற்கான குறுகிய கால தேவைக்கான டெண்டர்கள் சர்வதேச போட்டி விலைக்கு ஏற்ப நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இலங்கை நிலக்கரி நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாத எந்தவொரு தரப்பினரும் குறைந்தபட்சம் 180 நாட்களுக்கு கடன் காலத்துடன் விநியோகத்தை முடிக்க முடியும்.