சமூக ஊடகங்கள் ஊடாக அரச ஊழியர்கள் கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் அரச நிர்வாக அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த சுற்றறிக்கைக்கு எதிராக பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் குழு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து பேசிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்.
அரச உத்தியோகத்தர்கள் வெளிப்படுத்திய உண்மையை மூடி மறைக்கும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தொழிலாளர் போராட்ட நிலையத்தின் ஏற்பாட்டு செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.