அண்மையில் தொழிநுட்பக் கோளாறினால் ஏற்பட்ட நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்றாவது அலகின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அனல்மின் நிலையத்தின் முதலாவது மற்றும் மூன்றாவது அலகுகள் தேசிய மின்வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 03 மாதங்களுக்கும் மேலாக பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது அலகின் பணிகள் இம்மாத நடுப்பகுதியில் நிறைவடைய உள்ளதாக மின்சக்தி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.