அமெரிக்க மனிதாபிமான அமைப்புகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் இன்று நாட்டை வந்தடைகின்றன.
வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலையீட்டின் மூலம், இலங்கை மருந்துப் பொருட்களையும் மருத்துவ உதவிகளையும் இலவசமாகப் பெறும். அந்த மனிதாபிமான அமைப்புகளால் ஜூலை மாதம் முதல் இலங்கைக்கு 04 தொகுதிகளாக மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த 04 தொகுதி மருந்துப் கையிருப்புகளின் மொத்தப் பெறுமதி சுமார் 4.6 பில்லியன் ரூபா என வொஷிங்டனுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவிகளைப் பெறுவதற்கு மனிதாபிமான அமைப்புகள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.