நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேச கடல் பரப்பில் பெண் ஒருவரின் சடலமொன்று மிதந்து வருவதாக மீனவர்களினால்
சாய்ந்தமருது பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை (03) கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கல்முனை கடற்படையின் உதவியுடன் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைகளுக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற வேலையிலேயே குறித்த பெண் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதினை அவதானித்து சாய்ந்தமருதுக்கு பொறுப்பான பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர் மேலும் இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருது பொலிஸார் கல்முனை கடற்படையின் உதவியை நாடியிருந்தனர். இதனடிப்படையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 55-60 வயது மதிக்கத்தக்க வயோதிய பெண்ணினுடைய சடலத்தினை மீட்டு கல்முனை கடற்படை கரைக்கு கொண்டுவரப்பட்ட சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இருந்த போதிலும் குறித்த பெண்ணினுடைய சடலத்தினை இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடதக்க விடையமாகும்.