யூ.கே. காலித்தீன்
“சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலக சிறுவர் தினமானது ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுவது வலமை அன்றய தினம் சனிக்கிழமையாக இருந்தமையினால் இன்று சகல பாடசாலைகள், முன்பள்ளிகள் போன்ற இடங்களில் சிறுவர் தினம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவைகையில் சாய்ந்தமருது பொலிவோரியன் கிராமத்தின் எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் அதிபர் ஏ.எல். அப்துல் நாபித் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.
மேற்படி சிறுவர்தின நிகழ்வானது பாடசாலை மாணவர்களினால் பாடசாலை வளாகத்திலிருந்து பொலிவோரியன் கிராமத்தின் வீதிகளில் போதைப்பொருள் உழைக்கும் பணம் உன்குடும்பத்திற்கு சாபத்தினை கொண்டு வரும், சமூகமே உமது சுமைகளை எங்களிடம் தினிக்காதே, பெற்றோர்களே குடும்பங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்துங்கள், சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு ஆலாக்கதே, இந்த உலகத்தை அழகாக்கும் குழந்தைகளுக்கு சினேக பூர்வமான சூழலை உருவாக்கித்தாருங்கள் எனும் சுலோகங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றதோடு போதை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதி ஓர நாடகமும் மாணவர்களால் அரங்கேற்றியமை விஷேட அம்சமாகும்.
இதில் மாணவர்கள், அதிபர், பிரதி அதிபர், ஆசிரியோரக்ள் மற்றும் பாடசாலை பெற்றோர் சங்கத்தினரும் ஊர்வலமாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.