பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் திங்கட்கிழமை(3) குறித்த சடலம் கடலில் மிதந்திருந்தபோது கடற்படையினரின் உதவியுடன் சாய்ந்தமருது பொலிஸார் கரைக்கு கொண்டுவந்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த சடலமானது இனங்காணப்படாதிருந்த சூழலில் இன்று பொதுமக்களின் உதவியினை பொலிஸார் கோரி இருந்தனர்.அத்துடன் ஊடகங்கள் பலவற்றிலும் குறித்த செய்தியானது பிரசுரமாகி இருந்த நிலையில்.
குறித்த செய்தியினைத் தொடர்ந்து பெண்ணினுடைய உறவினர்கள் சடலத்தினை அடையாளம் காட்டியதுடன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயார் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார்.
மேலும் தெரியவருவதாவது சடலமாக மீட்கப்பட்ட நபர் ஆசிரியர் என்றும் இம்மரணமானது தற்கொலையா அல்லது கொலையா என்கின்ற கோணங்களில் அடுத்தகட்ட விசாரணைகளினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.