எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டால் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நாடளாவிய ரீதியில் பத்தாயிரம் பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்துள்ளார்.
வாய்மூல பதில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பரீட்சையை ஒத்திவைக்கும் கோரிக்கையை பரீட்சை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதையடுத்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே, ரோகினி கவிரத்ன, பேராசிரியர் குணபால ரத்னசேகர ஆகியோர் தலையிட்டனர்.
இதேவேளை, உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் இன்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.