இலங்கையில் பாடசாலைக் கல்வியை முடிக்கும் இளம் மாணவர்களுக்கு ஜப்பானில் நான்கு வருட தொழில்நுட்பப் பயிற்சியை வழங்குவதற்கு, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் Gojo City மேயர் Yoshinori Ohta தனது உடன்பாட்டைத் தெரிவித்தார்..
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் 70 வருடங்களை நிறைவு செய்யும் வகையில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவல்கள் அடங்கிய அறிவிப்பு கீழே உள்ளது.