நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த அறிக்கையை முன்வைக்கவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார மேலும் தெரிவித்தார்.