பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார 15 வாக்குகளைப் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எரான் விக்ரமரத்ன 07 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இந்தப் பதவியை முன்னர் பேராசிரியர் சரித ஹேரத் வகித்து வந்தார். அரச கணக்காளர்கள் சபை அல்லது கோபா குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.