கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஆனந்த ஜயவர்தன பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் இளைஞன் ஒருவரின் முகத்தில் அசிங்கமான தோற்றத்தை ஏற்படுத்திய பிறப்பு அடையாளத்தை முற்றாக நீக்கி அவருக்கு புதிய தோற்றத்தை வழங்கியுள்ளார்.
இரத்தினபுரியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கேகாலை பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான டொக்டர் ஆனந்த ஜயவர்தன, இளைஞனின் தொடைப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதியை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மூலம் இடமாற்றம் செய்து இந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்குள் மயக்க மருந்து நிபுணர் உதவியுடன் சத்திரசிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை அறையின் அனைத்து ஊழியர்களின் உதவியுடன் இவ் அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு அந்த இளைஞன் குணமடைந்துள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த ஜயவர்தன,
“நல்ல ஆரோக்கியத்திற்கு உடல் மட்டுமல்ல, மனரீதியான சமநிலையும் தேவை. ஒருவருக்கு மனரீதியாக அவர்களை பாதிக்கும் பிரச்சனைக்கு பதில்கள் தேவை. இவ் அறுவை சிகிச்சைகள் சவாலானவை. எனவும் இது மிகவும் வெற்றியடைந்துள்ளதாகவும் மேலும். இந்த அறுவை சிகிச்சைகள் சாத்தியம் என்பதை சமூகம் அறிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.”