வங்கிகளால் தனியார் துறைக்கு கடன் வழங்குவது படிப்படியாக குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் தனியாருக்கு கடன் வழங்குவது குறையும் என அதன் பொருளாதார ஆய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் கலாநிதி எல்ஆர்சி பட்பெரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாத இறுதியில் பணவீக்கம் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்தார்.
இந்நாட்டில் கடன் வழங்கியவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் ஏற்கனவே முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.