இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் இந்த வருட நட்டம் மொத்த அரச வருமானத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இந்த மூன்று அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு சுமார் 4,000 பில்லியன் ரூபாவாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், மொத்த மாநில வருவாய் 1,450 பில்லியன் ரூபாய் அளவில் உள்ளது. 1,428 பில்லியன் ரூபா அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக மட்டுமே அரசாங்கத்தினால் செலவிடப்பட்டிருக்கின்றது. அதன்படி இந்த ஆண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு மொத்த அரச வருமானத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.