நானோ தொழிநுட்பம், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்கள் பல்கலைக்கழக கற்கைநெறிகளில் உள்வாங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் வளர்ந்த நாடுகளில் உயர்கல்வி கற்கும் பிள்ளைகளின் அறிவுக்கு நிகராக இந்நாட்டு பிள்ளைகளின் அறிவு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து சர்வதேச மட்டத்திலான அறிவைப் பெற்று இந்த நாட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு இணையான தொழில் களம் இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, பேராசிரியர்களின் ஒப்புதலுடன் பல்கலைக்கழக அளவில் உயர்கல்வி பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை அளவில் இடைநிலைக் கல்வியும் அதற்கேற்பப் புதுமைப் படுத்தப்பட்டு, 13ம் ஆண்டுக்குப் பிறகு மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்.
புதிய கல்விச் சவால்களுக்கு முகங்கொடுக்கும் மந்தநிலையைக் காட்டும் பிள்ளைகளை தரம் 9க்குப் பின்னர் தொழிற்பயிற்சிக் கல்விக்கு அனுப்ப வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தரம் 10 முதல் செயற்கை நுண்ணறிவை ஒரு பாடமாகக் கற்பிக்க வேண்டும் என்றும் உயர்கல்வி மற்றும் இடைநிலைத் துறையிலும் புதுமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், ஆரம்பத் துறையில் தொடர்புடைய மாற்றங்களுடன், புதிய கல்வி மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கல்வியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.