நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜராகாத இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை கைது செய்து ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
ஆனால் சனத் நிஷாந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு, பொலிஸ் மா அதிபருக்கு இந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது.