விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற சந்தேகநபர் வெலிக்கடை சிறைச்சாலை மகளிர் பிரிவினரால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபரிடம் இருந்து கையடக்கத் தொலைபேசியொன்றை சிறைச்சாலை அவசர நடவடிக்கை தந்திரோபாயப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி, சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையிலான சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (ஊடகப் பேச்சாளர்) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.