காணாமல் போனதாகக் கூறப்படும் கடவட கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர் 10 நாட்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பியுள்ளார்.
குறித்த மாணவர் நேற்று (12) கல்வி நடவடிக்கைகளில் கலந்து கொண்டதாக பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.