குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உபகுழு அடுத்த வாரம் தனது தலைமையில் கூடவுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குழுவின் முதற்கட்டமாக குடிமக்கள் சேவைகள் மற்றும் பொது நிர்வாகத்தை எவ்வாறு சீரமைப்பது என்பது குறித்து ஆலோசிக்க குழு ஒன்று கூடவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கை வகுப்பில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் உப குழுவின் ஏனைய உறுப்பினர்களில் பவித்ரா வன்னியாராச்சி, சாகர காரியவசம், வஜிர அபேவர்தன, அசங்க நவரத்ன, மனோ கணேசன், ரோஹித அபேகுணவர்தன, அலி சப்ரி ரஹீம். , பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம், நசீர் அஹமட், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் ஏ. எல். எம். அதாவுல்லா அடங்குவதாக யஜரிவிக்கப்படுகின்றது.