நீர் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் எரிசக்தி தேவை குறைவினால் இந்த வார இறுதியில் மின்வெட்டு காலத்தை குறைக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தால் மின்சாரத் துண்டிப்பை குறைந்தபட்ச அளவிலேயே குறைக்க மின்சார சபை நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எதிர்கால மின்சார உற்பத்திக்காக கிடைக்கக்கூடிய நீர் ஆதாரங்களை இலங்கை மின்சார சபை நிர்வகிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.